Wednesday, September 17, 2008

சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சி பார்த்தேன்.

வருகிறோம் வருகிறோம் இந்த மாதத்தில் என்ற விளையாட்டை குழந்தைகள் விளையாட பார்த்தேன். கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

நாம் குழந்தைகளுக்கு அந்த மாதிரி விளையாட்டுக்களை அறிமுகப் படுத்த வில்லையோ என்ற வருத்தம் அலைமோதுகிறது . சின்ன வயதில் விளையாடியது நினைவுக்கு வந்தது . தொலை தூரமானாலும் நடை . அளவான.தேவைகள் . நிறைவான வாழ்க்கை என்று வாழ்ந்த அந்த காலம் நன்றாக இருந்ததா புரியவில்லை.

பில்லைப்பருவத்து விளையாட்டுக்களை இப்படி தொலைக்கலாமா யோசியுங்களேன்

நமது கலாசாரம் . அதில் கதைகளும் கற்பனைகளும் இருந்தாலும் அவற்றோடு கூட நம் கலாச்சாரத்தை நேசிப்பதும் ஒரு அழகல்லவா .குற்றஞ் குறைகள் இருந்தாலும் நம் அம்மாவை நேசிக்கிரோமே அதுபோலே.ஒ அம்மாவைதான் முதியோர் இல்லத்துக்கு அனுப்ப தயாராக இருக்கிறோமே என்கிறீர்கள; அப்புறம் என்ன சொல்ல

Saturday, July 12, 2008

கிளி வந்து கொத்திய கொய்யா

கிளி வந்து கொத்திய கொய்யா
கிளி வந்து கொத்தாத கொய்யா அநேகமாஹ கண்ணதாசன் பாடலாக இருக்கும் என நினைக்கிறேன்
காலை நேரத்தில் நடந்து கொண்டிருந்தேன்
இரண்டு கிளிகள் பறந்து வந்தன .பக்கத்திலே இருக்கிற காலி மனையில் உள்ள கொய்யா மரத்தில் அமர்ந்தன
அப்போதுதான் எனக்கு அது உறைத்தது .
கிளிகளை நாம் இப்படி சுதந்திர மாஹ பார்த்ததில்லை அல்லவா
கிளி ஜோசியக்காரன் பெட்டியில் !
மிருகக் காட்சி சாலையில் கூண்டுக்கு நடுவே !
இரண்டும் கீச் கீச் என்று கத்திக் கொண்டு வேறு வேறு கிளைகளில் அமர்ந்தன .
அப்போதுதான் அது நிகழ்ந்தது !
  அந்த  மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு கொய்யாக் கனிகளை கொத்தித் தின்ன ஆரம்பித்தன .
    ஒரு கிளி ரொம்பவும் லாவகமாக  கொத்தியது..
அப்போது நான் செய்த கலாட்டாவில் அக்கம் பக்கமெல்லாம் வந்து பார்த்தார்கள்.
  கொத்தி கொத்தி கிட்டத்தட்ட  ஒரு ஐஸ் கிரீம்  கப்  அளவுக்கு செய்து விட்டது.
  மேல்  கிளையில் அமர்ந்து கொண்டு  தொங்குகின்ற   அந்த கொய்யாவின் உள்ளே அது கொத்தி சாப்பிட்ட அழகே அழகு.
 இன்றைக்கு நினைத்தாலும் படமாய்  விரிகிறது.