Saturday, March 31, 2012

அன்பு நண்பர்களே
     தொடர்ந்து எழுதுவதாக உள்ளேன் . ஏப்ரல் 1 ன்னு நினைக்காதீங்க . நிஜம்  நிஜமோ நிஜம்.
வெகு நாட்களுக்கு பிறகு கோவை கம்பன் விழாவில் மேடை ஏறினேன். மிக சுகமாக இருந்தது .சிறந்த இலக்கியவாதியும் ராஜ் டி வி புகழ் நடுவருமான அப்துல் காதர் தலைமை .
தலைப்புதான் கொஞ்சம் ஆழம் . ஆழமுன்னா ஆழம் . வெகு ஆழம் தலைப்பு கேட்டிங்களா  திருக்குறளின்  குரல் ஓங்கி ஒலிப்பது   பாலகாண்டதிலா அயோத்யா  காண்டதிலா  சுந்தர காண்டத்திலா . இதுதான் தலைப்பு 
    கோவை கம்பன் கழகத்தின் மார்கண்டேய  செயலர்  80 ஐ தாண்டிய  நஞ்சுண்டன்  அய்யா  அவர்களின் தூண்டுதல்தான்  எனது  பங்களிப்புக்கு காரணம் .
       பழைய  நினைவுகள்  பொங்கி எழுந்தது . பேசிய பேச்சுக்கள் , படித்த கவிதைகள்  எல்லாம் நினைவுக்கு வந்தது.அந்த  மேடை  அப்படி ஒரு மேடை .நஞ்சுண்டன் அய்யா அவர்களை போன்றவர்கள் செய்கிற பணி பாராட்டுக்குரியது .ஏனென்றால்  தரமான ரசனை உணர்வை காப்பாற்றுபவர்கள் இவர்களை போன்றவர்கள்தான்
 

 



Monday, March 12, 2012

நேற்று ஒரு திருமணத்துக்கு போயிருந்தேன் .


வீரமணி என்ற ஒரு நண்பர் . ராஜேஸ்வரி என்ற அற்புதமான பெண்ணை திருமணம் செய்தார் .இதில் என்ன விசெஷேம் என்கிறிர்களா . மணமகள் ஒரு மாற்றுதிரனாளி. திருமணம் மிக எளிமையாக விஜயா பதிப்பகம் வேலாயுதம் அய்யா தாலி எடுத்து கொடுக்க நடைபெற்றது .


வாழ்கையை இப்படி எதிர்கொள்கிற துணிவு எத்தனை பேருக்கு வரும்.நான் கலந்து கொண்டதில் மணமகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.அன்பும் கண்ணீருமாய் நன்றி சொன்னார். படங்கள் கேட்டிருக்கிறேன். வந்தவுடன் பார்வைக்கு வைக்கிறேன் .


நான் பார்த்த நல்ல இரு இளம் உள்ளங்களை நீங்களும் பாருங்கள் .