Saturday, February 16, 2013

வணக்கம் 
இப்போது   மனதை உலுக்கும் செய்தி ஒன்று .
   விவசாயிகள் நிலை.காஸ் பைப் போடுவதற்காக அவர்களின் அனுமதி இல்லாமல் நிலத்தை  ஆக்ரமிக்கும் அக்கிரமம்.
.         இங்கே தனிமனித உரிமைகள் மதிக்கபடுவதே இல்லை .ஏற்கனவே விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறதோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது .கான்க்ரீட் கட்டிடங்கள் விளை  நிலங்களை கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றன .விவசாயம் செய்கிற கொஞ்ச நஞ்சம்  பே ரையும் 
இவ்வளவு  லட்சணமாக ஊக்குவிக்கிறோம் !
          பொதுவாகவே  நம் தமிழ்நாட்டில் மெத்தனம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது .அதனால்தான் தமிழ்நாட் டுக்காரர்களை எப்படி வேண்டுமானாலும்   ஏய்க்கிறார்கள் .
          விவசாயிகள்         நாங்கள் மூன்று மாற்றுத் திட்டங்களைக் கொடுக்கிறோம் .அரசாங்கம் கண்டுகொள்ளவே  இல்லை என்கிறார்கள் நிலத்தின் மார்க்கெட் மதிப்பில் பத்தில் ஒரு பங்குதான் தரப்படும் என்று சொல்லப் படுகிறதாம்.கருத்துக்கு மதிப்பே கொடுக்காமல் அவர்களை வெளியேற்றப்படுகிறார்கள் என்கிறார்கள்
   .அவர்களின் குரலுக்கும் அரசாங்கம்  மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று கெஞ்சுவதை மட்டும்தான் நாம் செய்ய முடியும்.
        அரசாங்கம் மக்களின் பிரதிநிதி என்று நம்பிக்கொண்டு அறிவுரை சொல்லப்போய் அதற்கப்புறம் அவஸ்தைப் படுவது யாராம்.மனசு கேட்காமல் புலம்பிக் கொள்ளலாம்.
     நானும்  சேர்ந்து புலம்புகிறேன் என்று கொஞ்சம் பேராவது குரல் குடுங்கய்யா..