Saturday, February 16, 2013

வணக்கம் 
இப்போது   மனதை உலுக்கும் செய்தி ஒன்று .
   விவசாயிகள் நிலை.காஸ் பைப் போடுவதற்காக அவர்களின் அனுமதி இல்லாமல் நிலத்தை  ஆக்ரமிக்கும் அக்கிரமம்.
.         இங்கே தனிமனித உரிமைகள் மதிக்கபடுவதே இல்லை .ஏற்கனவே விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறதோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது .கான்க்ரீட் கட்டிடங்கள் விளை  நிலங்களை கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றன .விவசாயம் செய்கிற கொஞ்ச நஞ்சம்  பே ரையும் 
இவ்வளவு  லட்சணமாக ஊக்குவிக்கிறோம் !
          பொதுவாகவே  நம் தமிழ்நாட்டில் மெத்தனம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது .அதனால்தான் தமிழ்நாட் டுக்காரர்களை எப்படி வேண்டுமானாலும்   ஏய்க்கிறார்கள் .
          விவசாயிகள்         நாங்கள் மூன்று மாற்றுத் திட்டங்களைக் கொடுக்கிறோம் .அரசாங்கம் கண்டுகொள்ளவே  இல்லை என்கிறார்கள் நிலத்தின் மார்க்கெட் மதிப்பில் பத்தில் ஒரு பங்குதான் தரப்படும் என்று சொல்லப் படுகிறதாம்.கருத்துக்கு மதிப்பே கொடுக்காமல் அவர்களை வெளியேற்றப்படுகிறார்கள் என்கிறார்கள்
   .அவர்களின் குரலுக்கும் அரசாங்கம்  மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று கெஞ்சுவதை மட்டும்தான் நாம் செய்ய முடியும்.
        அரசாங்கம் மக்களின் பிரதிநிதி என்று நம்பிக்கொண்டு அறிவுரை சொல்லப்போய் அதற்கப்புறம் அவஸ்தைப் படுவது யாராம்.மனசு கேட்காமல் புலம்பிக் கொள்ளலாம்.
     நானும்  சேர்ந்து புலம்புகிறேன் என்று கொஞ்சம் பேராவது குரல் குடுங்கய்யா..

         
          

Thursday, January 24, 2013

இந்த மண்ணின் சாபக்கேடோ என்னமோ மதிக்கப் பட வேண்டியவர்களை நாம் இனம் கண்டு கொள்வதில்லை .அப்படி இந்த மண்  கொண்டாடி இருக்க வேண்டியவர் எம்.எஸ்.உதயமூர்த்தி அய்யா.செய்யத்தவறினோம்.
                    அவருக்கு அஞ்சலி செலுத்துகிற இந்தத் தருணத்தில் அவர் ஒரு பத்திரிகையில் எழுதிய இல்லையில்லை விடுத்த எச்சரிக்கையை நினைவு படுத்த விரும்புகிறேன்.நாட்டை அழுத்திக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சினைகளை விட்டு விட்டு பொழுதுபோக்குகளில் நம்மை தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.ரொம்பவும் யோசிக்க வேண்டிய விஷயம்.
அவரது எண்ணங்கள் புத்தகத்தை ஒரு முறையாவது படியுங்கள்.
           அவரது ஆன்மா சாந்தியடைய இறை சக்தியை பிரார்த்திக்கிறேன் 
வணக்கம்
        பல நாட்களுக்குப்  பிறகு ப்ளாக்க்கு வருகிறேன் .
    இடைப்பட்ட  காலத்தில்  நிறைய  சொல்ல வேண்டியிருந்தது .ஆனால் வாய்க்கவில்லை. வேறென்ன  சொல்ல?
          சில  விஷயங்கள்  நம்மை அவஸ்தைப் படுத்தும் .உந்தித் தள்ளும்.அப்படி ஒரு  விஷயம் . எம் .எஸ். உதயமூர்த்தி அய்யா அவர்களின் மறைவு.
           அறபுதமான  மனிதர்.எனது கனிந்த மனத் தீபங்களாய் நாவலின் கதாநாயகன்  சிவநாதனின் ஆதர்ஷ நாயகனாக அவரைக் குறிப்பிட்டிருப்பான்.
எனது  பதின்ம என் உள்ளத்தில் பதிந்த அவரது கட்டுரைத் தொகுப்பு எனது வாழ்க்கை முழுதும் பயணித்தது.பயணிக்கிறது
         எனது அந்த நாவலைப் படித்து விட்டு கருத்துக் கொடுத்தார்.அப்படிக் குழந்தையைப்  போல மகிழ்ந்தார். சென்னை வந்தா கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும் என்று அழைத்தார்.அந்த வாய்ப்பும் கிடைத்தது.நானும் என் மகனும் அந்த  நல்லனுபவம் பெற்றோம்.
          கார்  அனுப்பி  வரவேற்று உபசரித்ததை மறக்கவே முடியாது.ஏதோ விருதுக்கும்  கூட பரிந்துரைத்ததாக சொன்னார்.அது  நிறைவேறாதபோது  என்னைக் காட்டிலும் அவர் வருத்தப்பட்டார்.
            பதவிகள் தேடி வந்த போதும் மறுத்தவர். இன்று  சுயமுன்னேற்றப் புத்தகங்கள்  எழுதுவது  ஒரு லாபகரமான விஷயமாகி விட்டது.ஆனால் அன்றைக்கு உள்மனம் ,வெளிமனம், ஆழ்மனம் பற்றி அவர் போட்ட விதைகள் பல்வேறு வடிவங்களில்  பெருகியுள்ளது .
           குழந்தையைப் போல சுபாவம்.இந்த  இடத்திலேதான் காகத்துக்கு சாப்பாடு வைப்போம். பறவைகளெல்லாம் இங்கே உட்காரும் என்று காட்டி மகிழ்ந்தார்.
            கடற்கரைக்கு வெகு அருகில் வீடு.கடற்கரைக்கு அழைத்துப் போனார்.நான் ஜன்ம சாபல்யம் அடைந்தது போல் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்க அவர் எங்கள் வருகையைத் தன் கலப்படமற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி   கௌரவப்படுத்தினார்.
         மிக முக்கிய இழப்பாக உணர்கிறேன்