Thursday, April 19, 2012

என்னுடைய தமிழ்த்தேன் பதிப்பகத்தின் இரண்டாவது  நாவல்  நானென்றும் நீஎன்றும் முதல் பாகம் வெளிவருகிறது. 2 ம பாகம் தயாரிக்க வேண்டிய அவசியம்.   
    அவகாசம் கிடைக்கும்போது   பிளாகுக்கு வருகிறேன் .அதுவரைக்கும் சின்ன பிரேக் 

Saturday, April 14, 2012

படித்தது
        சென்னையில் நந்தனம் பகுதியல் குடும்ப நண்பர்கள் இருந்தார்கள். போக்குவரத்து உண்டு. இது என்ன பெயர் என்று யோசித்தது உண்டு.இப்படி ஒரு நந்தன ஆண்டில் உருவாக்கப்பட்ட பகுதியாம் .கோவையிலும்  நிறைய  இடங்களுக்கு சரித்திர பின்னணி உண்டு. அழகிய கோவையை  வைத்து ஒரு பீரியட் நாவல் எழுத ஆசை. பார்க்கலாம்
     அழகிய ஒரு குறுந்தொகை பாடல் படித்தேன். நாளைக்கு அதை பற்றி ....!
 பகிர்வது
     இன்றைக்கு  கிருஷ்ணமுர்த்தி என்னிடம் பேசினார்.என்னுடைய  உயிரஅகத்தே  ஒளியாகி நாவல் மிகவும் பிடித்ததாம்.
     எந்த கிருஷ்ணமூர்த்தி தெரியுமா?   அப்துல்கலாம் அவர்களுக்கு  மிகவும் பிடித்த மனிதர்  அவரைபற்றி  நாளைக்கு . விஷயம் வேறொன்றும் இல்லை . மின்சாரம் எந்த நேரம் வேண்டுமானாலும்  போகலாம்.
 கவிதை
    எனது கவிதைகளை
     வாசித்து காதலிக்கிற
    அவலழகிய   கவிதைய
    காதலித்து    வாசிக்க
    காத்திருக்கிறேன்
  எனது கதாநாயகன் சிவநாதன் உருகி சொன்ன கவிதை            

Thursday, April 12, 2012

இன்னொரு புத்தாண்டு பிறக்கிறது 
        பூச செண்டுக்கு  கை கால் முளைத்தார்  போன்று  கைகாலை ஆட்டிக்கொண்டு   பேரன் சிரிக்கையில் உலகம் மறக்கத்தான்  செய்கிறது.
         சுகமான  புது வரவுகளுக்கும் கனமான இல ப்புக்களுக்கு  நடுவே  வாழ்க்கை நகரத்தான் செய்கிறது.
   ஆனந்த விகடனில் ராஜு முருகனின் எழுத்துக்களில் அனுபவ குவியல்களின் ஆழம் தெரிகிறது .வெறும் ரசனை சார்ந்த விஷயமாக மட்டும் இல்லாமல் எல்லா வகையான மனிதர்களை பற்றிய ஆழ்ந்த அக்கறை தெரிகிறது.அலசல் தெரிகிறது
      இந்த வாரம் ஆண்டுக்கணக்காக ஒரே தொழிலை சலிப பில்லாமல்  செய்கிற யதார்த்தமான மனிதர்களை பற்றி பதிவு செய்திருக்கிறார் . 
     ஒரு விஷயத்தில் திருப்தி. எனக்கு மட்டும்தான் ஒரு வித சலிப்பு  தோன்றுகிறதோ என்று எண்ணியதுண்டு .ஆனால்  இப்படி ஆட்கள் நாடு நகரத்திலே விரவியிருக்கிறார்கள்  என்பதில் திருப்தி 
        இன்னொரு விஷ்யம்  என்னவென்றால்  ஒரேமாதிரி வாழ்கையை  சலிப்பில்லாமல்  வல்கிரவர்களை  பார்த்து ஒரு   பொறாமை . கொடுத்து வைத்தவர்கள் எதைபற்றியும் கவலை படாமல் , எந்த அவஸ்தையும் இல்லாமல்   வாழ்வதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா அவர்கள்   பாக்கியம் செய்தவர்கள் .
      இந்த இங்கிலீஷ் டு தமிழ் கொஞ்சம் அவஸ்தை படுத்தத்தான்  செய்கிறது.கொஞ்ச நாளில் பழகி விடுவேன். அப்புறம் நிறைய விஷயங்கள் வந்து விழும் என்று நம்புகிறேன் காத்திருங்கள் 
      
            

Sunday, April 1, 2012

அன்பு நண்பர்களே
     நிறைய எழுத ஆசையாக இருக்கிறது . எதை எழுதுவது எதை விடுவது  என்பதுதான் புரிய வில்லை . இப்படி வைத்துகொள்கிறேன் .
 கொஞ்சம் கவிதை .
கொஞ்சம்  விமர்சனம்
 கொஞ்சம் இலக்கியம்    சரியா
   இன்றைக்கு  கவிதை  என்னோடதுதான்.

பூத்த புதுக்கவிதை
புத்தகத்தில் மட்டுமல்ல
அம்மாவின் இடுப்பிலும்தான் !

 விமர்சனம்
 கூடங்குளம்  அணுமின்நிலையம்  . ௨ ஜி  ஊழல் போன்ற விஷயங்களில் நடுத்தர குடும்பங்கள் எல்லாம் பட்டும் படாமல் இருந்து மிக பெரிய தவறு செய்கிறோமோ என்று கவலையாக இருக்கிறது. குறைந்ந்த பட்சம் நமது
அதிருப்தியையாவது  பதிவு செய்ய வேண்டாமா . நான் செய்கிறேன்
இலக்கியம் .

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா  கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி  நல்லவர்  ஆடவர்
அவ்வழி  நல்லை வாழிய நிலனே

 இது ஒரு  ஔவையார் பாட்டு
        
  இதை நான்  எளிமைபடுத்தியிருக்கிறேன்    புறநானூற்றில்  வருகிறது   

      நாடு என்றே இருப்பினும் சரியே
          காடு  என்றே இருப்பினும்  சரியே
     மேடு  என்ற நிலையே ஆகுக
          பள்ளம் என்றே விளங்கினும்   சரியே
     இடந்தான் எதுவாய் ஆயினும்  மக்கள்
         எங்கு நல்லராய்  உளரோ அந்த
      இடத்தில் நிலமே நீயும் நல்லது
           ஆவாய் நீதான்  நீடு வாழ்க
  
 நாம்  நல்லவராய் இருக்கிறோம் .  வல்லவராய்  இருக்கிறோமா  குறைந்த பட்சம் கருத்து   தெரிவிப்பதிலாவது?