இன்னொரு புத்தாண்டு பிறக்கிறது
பூச செண்டுக்கு கை கால் முளைத்தார் போன்று கைகாலை ஆட்டிக்கொண்டு பேரன் சிரிக்கையில் உலகம் மறக்கத்தான் செய்கிறது.
சுகமான புது வரவுகளுக்கும் கனமான இல ப்புக்களுக்கு நடுவே வாழ்க்கை நகரத்தான் செய்கிறது.
ஆனந்த விகடனில் ராஜு முருகனின் எழுத்துக்களில் அனுபவ குவியல்களின் ஆழம் தெரிகிறது .வெறும் ரசனை சார்ந்த விஷயமாக மட்டும் இல்லாமல் எல்லா வகையான மனிதர்களை பற்றிய ஆழ்ந்த அக்கறை தெரிகிறது.அலசல் தெரிகிறது
இந்த வாரம் ஆண்டுக்கணக்காக ஒரே தொழிலை சலிப பில்லாமல் செய்கிற யதார்த்தமான மனிதர்களை பற்றி பதிவு செய்திருக்கிறார் .
ஒரு விஷயத்தில் திருப்தி. எனக்கு மட்டும்தான் ஒரு வித சலிப்பு தோன்றுகிறதோ என்று எண்ணியதுண்டு .ஆனால் இப்படி ஆட்கள் நாடு நகரத்திலே விரவியிருக்கிறார்கள் என்பதில் திருப்தி
இன்னொரு விஷ்யம் என்னவென்றால் ஒரேமாதிரி வாழ்கையை சலிப்பில்லாமல் வல்கிரவர்களை பார்த்து ஒரு பொறாமை . கொடுத்து வைத்தவர்கள் எதைபற்றியும் கவலை படாமல் , எந்த அவஸ்தையும் இல்லாமல் வாழ்வதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா அவர்கள் பாக்கியம் செய்தவர்கள் .
இந்த இங்கிலீஷ் டு தமிழ் கொஞ்சம் அவஸ்தை படுத்தத்தான் செய்கிறது.கொஞ்ச நாளில் பழகி விடுவேன். அப்புறம் நிறைய விஷயங்கள் வந்து விழும் என்று நம்புகிறேன் காத்திருங்கள்