Saturday, March 31, 2012

வெகு நாட்களுக்கு பிறகு கோவை கம்பன் விழாவில் மேடை ஏறினேன். மிக சுகமாக இருந்தது .சிறந்த இலக்கியவாதியும் ராஜ் டி வி புகழ் நடுவருமான அப்துல் காதர் தலைமை .
தலைப்புதான் கொஞ்சம் ஆழம் . ஆழமுன்னா ஆழம் . வெகு ஆழம் தலைப்பு கேட்டிங்களா  திருக்குறளின்  குரல் ஓங்கி ஒலிப்பது   பாலகாண்டதிலா அயோத்யா  காண்டதிலா  சுந்தர காண்டத்திலா . இதுதான் தலைப்பு 
    கோவை கம்பன் கழகத்தின் மார்கண்டேய  செயலர்  80 ஐ தாண்டிய  நஞ்சுண்டன்  அய்யா  அவர்களின் தூண்டுதல்தான்  எனது  பங்களிப்புக்கு காரணம் .
       பழைய  நினைவுகள்  பொங்கி எழுந்தது . பேசிய பேச்சுக்கள் , படித்த கவிதைகள்  எல்லாம் நினைவுக்கு வந்தது.அந்த  மேடை  அப்படி ஒரு மேடை .நஞ்சுண்டன் அய்யா அவர்களை போன்றவர்கள் செய்கிற பணி பாராட்டுக்குரியது .ஏனென்றால்  தரமான ரசனை உணர்வை காப்பாற்றுபவர்கள் இவர்களை போன்றவர்கள்தான்
 

 



No comments: