Thursday, January 24, 2013

வணக்கம்
        பல நாட்களுக்குப்  பிறகு ப்ளாக்க்கு வருகிறேன் .
    இடைப்பட்ட  காலத்தில்  நிறைய  சொல்ல வேண்டியிருந்தது .ஆனால் வாய்க்கவில்லை. வேறென்ன  சொல்ல?
          சில  விஷயங்கள்  நம்மை அவஸ்தைப் படுத்தும் .உந்தித் தள்ளும்.அப்படி ஒரு  விஷயம் . எம் .எஸ். உதயமூர்த்தி அய்யா அவர்களின் மறைவு.
           அறபுதமான  மனிதர்.எனது கனிந்த மனத் தீபங்களாய் நாவலின் கதாநாயகன்  சிவநாதனின் ஆதர்ஷ நாயகனாக அவரைக் குறிப்பிட்டிருப்பான்.
எனது  பதின்ம என் உள்ளத்தில் பதிந்த அவரது கட்டுரைத் தொகுப்பு எனது வாழ்க்கை முழுதும் பயணித்தது.பயணிக்கிறது
         எனது அந்த நாவலைப் படித்து விட்டு கருத்துக் கொடுத்தார்.அப்படிக் குழந்தையைப்  போல மகிழ்ந்தார். சென்னை வந்தா கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும் என்று அழைத்தார்.அந்த வாய்ப்பும் கிடைத்தது.நானும் என் மகனும் அந்த  நல்லனுபவம் பெற்றோம்.
          கார்  அனுப்பி  வரவேற்று உபசரித்ததை மறக்கவே முடியாது.ஏதோ விருதுக்கும்  கூட பரிந்துரைத்ததாக சொன்னார்.அது  நிறைவேறாதபோது  என்னைக் காட்டிலும் அவர் வருத்தப்பட்டார்.
            பதவிகள் தேடி வந்த போதும் மறுத்தவர். இன்று  சுயமுன்னேற்றப் புத்தகங்கள்  எழுதுவது  ஒரு லாபகரமான விஷயமாகி விட்டது.ஆனால் அன்றைக்கு உள்மனம் ,வெளிமனம், ஆழ்மனம் பற்றி அவர் போட்ட விதைகள் பல்வேறு வடிவங்களில்  பெருகியுள்ளது .
           குழந்தையைப் போல சுபாவம்.இந்த  இடத்திலேதான் காகத்துக்கு சாப்பாடு வைப்போம். பறவைகளெல்லாம் இங்கே உட்காரும் என்று காட்டி மகிழ்ந்தார்.
            கடற்கரைக்கு வெகு அருகில் வீடு.கடற்கரைக்கு அழைத்துப் போனார்.நான் ஜன்ம சாபல்யம் அடைந்தது போல் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்க அவர் எங்கள் வருகையைத் தன் கலப்படமற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி   கௌரவப்படுத்தினார்.
         மிக முக்கிய இழப்பாக உணர்கிறேன் 

No comments: