நண்பர்களே!
பல நாள்களுக்குப் பின் உங்களை சந்திக்கிறேன்.இதற்குள்ளாக வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் கடந்து போய் விட்டன .
இந்த மாதத் துவக்கத்தில் என்னோடு தொடர்புடைய ஒன்று என் கைவிட்டுப் போனது.
என் வீடு!
வீடென்பது வெறும் வசிக்கும் இடமல்ல .வாழும் இடம்.அந்த இடத்தில் நானே நின்று கட்டிய வீடு.நான் பணி செய்த இடத்துக்கு செல்வதற்கு வசதியாக நடந்து போகும் தூரத்தில் !.
அந்த வீட்டில் நடந்தவை எத்தனையோ நல்ல நிகழ்வுகள்.நல்ல சந்திப்புக்கள்! மங்களமான குடும்ப நிகழ்வுகள் எல்லாமே இப்போது நினைவுக்கு வருகின்றன.
முடிவெடுக்கும்போது என்னமோ அறிவுப் பூர்வமாக எடுத்த மாதிரித்தான் இருந்தது .ஆனால் கையெழுத்துப் போட்டு விட்டு வந்ததற்குப் பிறகு நினைவுகள் படையெடுக்கத் துவங்கி விட்டன.
மகன் படிதததும்,கனிந்த மன தீபங்களாய் என்ற நாவல் போன்ற பல நாவல்களை உணர்வு பூர்வமாய் எழுதியது.கணவரோடு இலக்கியம் பேசியது.தீவிரத்தோடு சண்டை போட்டது .சமாதானமானது மகனுக்கு திருமணமானது என் மருமகள் காலடி எடுத்து வைத்தது என் பேரன் விளையாடியது எல்லாம் இங்கேதான் .மறக்கமுடியுமா தெரியவில்லை
திருமதி மனோ சாமிநாதன் துபையிளிருந்தும்.யசோதா மதுரையிலிருந்தும் மஞ்சுளா தவராஜ் லண்டனிலிருந்தும் ஆர்வத்தோடு வந்து என்னை சந்தித்ததும் இந்த வீட்டில்தான்!
விருப்பப்படி சாமி அறை,புத்தக அலமாரிகள் என்று அமைத்திருந்தோம் .என் தாய் தொண்ணூறு வயதை எட்டிய போது சின்னதா க ஒருவிழா எடுத்தோம்.
என் மன சந்தோஷங்கள்.துக்கங்கள் பணியிடத்து சாதனைகள்.சிக்கல்கள் எல்லாவற்றையுமே எனது அறை சுவர்கள் அறியும்,
நாங்கள் அந்த வீட்டை வேறு வீட்டுக்குப் போன பிறகும் அங்கே
நல்லதே நடந்தது,என் கணவரின் தங்கைதான் அங்கே இருந்தார் .அவரது மகனுக்கும் திருமணமாகி குழந்தையும் பிறந்தது,
அங்கே எனக்கேற்பட்ட இழப்பு என் கணவரின் மறைவு.என் குடும்பத்தில் ஒவ்வொரு மறைவுக்கும் பிறகு என் வாழ்விலும் ஒருஇட மாற்றம் நிகழ்கிறது .
இருபதாண்டுகளுக்கும் மேலாக என்னோடு இருந்து இப்போதும் நல்ல காரணதிற்காக நல்ல கைகளுக்கே போயிருக்கிறது.இனி வேறொரு வடிவத்தில் என்னோடு இருக்கும் என்று நம்புகிறேன்.
விடை கொடுக்கிறேன்.
ஒரு உரிமையாளராக இல்லையெனினும் ஒரு நண்பனாக என் நினைவில் இருப்பாய்
விடை கொடுக்கிறேன் மனம் நிறைந்த நினைவுகளுடன்!
No comments:
Post a Comment