Thursday, March 31, 2016

நண்பர்களே
             சமீபத்தில் ஒரு புகழ் பெற்ற  சேனலில் ஒரு சர்ச்சை!
                சிறந்த ஒரு குரலைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் ஏற்பட்டிருக்கிற சர்ச்சை.
        அந்த  சானல் ஏற்கனவே  தன்னுடைய சட்ட திட்டங்களை நேயர்களுக்குத்  தெரிவிக்கவில்லையாம். நேயர்களுக்கு ஒரே  கவலை.ரொம்ப  அவசியம்.
             எது எப்படியிருந்தாலும் வெற்றி பெற்ற போட்டியாளர் படிப்படியாகத்  தன் திறமையை நிரூபித்துத் தான்  வெற்றி  பெற்றதாக  நான் கருதுகிறேன்.
                     அவர்களது சட்ட திட்டங்களைக் குறித்து இவ்வளவு கவலைப்
படுகிற மக்களே!
 உங்கள் தலையில் வண்டி வண்டியாய் மிளகாய் அரைக்கிற நம் அரசியல்வாதிகளைப் பார்த்து இப்படியெல்லாம் கேட்டிருக்கிறீர் களா?
                  தேர்தல் அறிக்கையைத்    தேர்தல் முடிந்தவுடன் தூக்கிக் குப்பையில் போடுகிற அரசியல்வாதிகள்!
                   உங்கள் தொகுதியில் கொடுத்த வாக்கை  நிறைவேற்றாத எம்.எல்.ஏ!  
      எக்கச் சக்கமாக பணம் வாங்குகிற தனியார் பள்ளி.கல்லூரி நிர்வாகங்கள்
 இவர்களை யாராவது  கேள்வி கேட்க முடியும்?கேட்டு விட்டு நிம்மதியாக இருக்க முடியும்?                  
 ஒரு பொழுது போக்கு நிகழ்வு!
வெளிப்படையாகத் தான் நடத்துகிறார்கள்!
போட்டியாளர்களை மெருகேற்றித் துலக்கிப் பளபளக்க வைக்கிறார்கள்.
         சின்னச்  சின்னக் குழந்தைகளைஎல்லாம்   சின்னவீடா  வரட்டுமா என்று பாட வைத்து இன்னும் கொஞ்சம் பீலிங் பத்தலை என்று சொல்லும் போது கஷ்டமாகதான் இருக்கிறது.அது வேறு  இஷ்யு.
              திறமையைத் தீர்மானிக்கும் இடத்தில் ஒட்டு தேவையா என்பது குறித்தும் எனக்குக் கேள்விகள் உண்டு.
                              எனினும் இப்போது என்     கருத்து.வெற்றியாளர்தகுதியானவரே !என் ஒட்டு அந்த இளைஞனு க்கே ! 
    

No comments: