Friday, May 25, 2012

வணக்கம்   நண்பரகளே !
           பல  நாடகளுக்குப் பிறகு  கிக்கானி  பள்ளியில் நடை பெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப  போயிருந்தேன் .
       நான்கு  பேர் பங்கு கொண்ட நிகழ்ச்சி. கவிங்கர்கள் . அதில் இசைக்கவி ரமணன்  அவர்கள் பாட்டு உள்ளத'தைக  கொள்ளை கொண்டது. பாடுகிற விதத்தில்  ஒரு கம்பீரம் . இனிமை. ஓடக்காரன் பற்றி  ஒரு பாடல் அவ்வளவு அருமை .
        சுகி சிவம்  அவர்களின்  தலைமை  வேறு. கலகலப்புக்குக் கேட்கவா வேண்டும்?.
      அதைவிட மகிழ்ச்சியான விஷயம் . பார்வையாளர்கள் .மிக உயர்வான ரசனையுள்ள ரசிகர்கள் . நல்ல கூட்டம் .அவர்களோடு அமர்ந்து இரசிப்பது  மிகவும் சுகமாக இருந்தது.
         இந்த  இடத்தில  மரபின் மைந்தன் முத்தையாவை க்  குறிப்பிடாமல் இருக்க முடியாது .
 ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்  நிறுவனத்துடன் இணைந்து பல ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை வழங்கி ஒரு பெரிய இரசிகர் கூட்டத்தையே  உருவாக்கியுள்ளார் அவரும் கவிதை வாசித்தார் .  எல்லாருடைய  கவிதைகளுமே  சிறப்பாக  இருந்த அந்த கவி அரங்கம்  ஒரு மறக்கவொண்ணாத   கவிதை  அனுபவம் .

No comments: