வணக்கம் நண்பரகளே !
பல நாடகளுக்குப் பிறகு கிக்கானி பள்ளியில் நடை பெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப போயிருந்தேன் .
நான்கு பேர் பங்கு கொண்ட நிகழ்ச்சி. கவிங்கர்கள் . அதில் இசைக்கவி ரமணன் அவர்கள் பாட்டு உள்ளத'தைக கொள்ளை கொண்டது. பாடுகிற விதத்தில் ஒரு கம்பீரம் . இனிமை. ஓடக்காரன் பற்றி ஒரு பாடல் அவ்வளவு அருமை .
சுகி சிவம் அவர்களின் தலைமை வேறு. கலகலப்புக்குக் கேட்கவா வேண்டும்?.
அதைவிட மகிழ்ச்சியான விஷயம் . பார்வையாளர்கள் .மிக உயர்வான ரசனையுள்ள ரசிகர்கள் . நல்ல கூட்டம் .அவர்களோடு அமர்ந்து இரசிப்பது மிகவும் சுகமாக இருந்தது.
இந்த இடத்தில மரபின் மைந்தன் முத்தையாவை க் குறிப்பிடாமல் இருக்க முடியாது .
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பல ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை வழங்கி ஒரு பெரிய இரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார் அவரும் கவிதை வாசித்தார் . எல்லாருடைய கவிதைகளுமே சிறப்பாக இருந்த அந்த கவி அரங்கம் ஒரு மறக்கவொண்ணாத கவிதை அனுபவம் .
No comments:
Post a Comment